Tuesday, February 25, 2020

நண்பர் எழில்புத்தன் அனுப்பிய கருத்தோவியம்

வாழ்க்கையோ கைரேகை போன்றது! மாறாத
சூழல் உடையது! அற்புத முத்திரையை
நாளும்  பதிவுசெய்வோம்!
வாழ்ந்திருப்போம் நேசிப்போம்!
வாழ்வின் சிறுபொழுதும்  வீணடிக் காமல்நாம்
பார்த்து கவனமுடன் நாளும் செயல்படுவோம்!
ஏனென்றால் காலம் விடுமுறை யற்றது!
காணும் கனவுக்கோ
காலா வதியில்லை!
மேலும் இடைநிறுத்தப் பொத்தான் கிடையாது!
வாழ்வை ரசிப்போம் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home