Saturday, March 21, 2020

குறள்தரும் எச்சரிக்கை!

அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்!
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை!

ஊரடங்கைப் போற்று! கொரோனா கிருமிகள்
ஓரளவு தாக்காது வாழ்வோம்! அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும் எச்சரிக்கை மானிடரே!
பாரில்  வருமுன்னர் காவாதான்  வாழ்க்கையோ
நேரில்  எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடுமுணர்!
கேட்பதைக் கேட்பதே நன்று.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home