Sunday, June 21, 2020

நண்பர் வீரமணி

நண்பர் வீரமணி போல யாருளார்,?

தந்தையைப் பார்க்க வரும்போது   வாங்கபாபா
என்றே வரவேற்பார்! பாக்கள் எழுதிய
வெண்தாளை ஆர்வமுடன் அங்கே பிரித்தேதான்
செந்தமிழ்த் துள்ளும் கவிதைகளை வாசிக்கும்
அந்த அழகே அழகு.

காணொளியைக் கண்டேன்! மலரும் நினைவுகள்
ஏக்கப் பிடியிலே தள்ளியது! வெள்ளந்திப்
பேச்சும் களங்கமற்ற புன்சிரிப்பும் பண்பாளர்
வீரமணி பேர்சொல்லும்! அத்தகைய நண்பர்கள்
யாருளார் என்தமிழே? சொல்.

மதுரை பாபாராஜ்
21.06.20

0 Comments:

Post a Comment

<< Home