Saturday, June 20, 2020

சிலப்பதிகாரம் நிறைவு!

கவிஞர் கமல்குமாருக்கு வாழ்த்து!

கற்புக் கடம்பூண்ட கண்ணகியின் காப்பியத்தை
அற்புதச் சந்தத்தில் பாவியமாய் ஆக்கிவிட்டார்!
சொற்சுவை மற்றும் பொருட்சுவை ஏந்திவர
அப்படியே தந்த கவிஞர் கமல்குமார்
நற்றமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

சோழநாட்டில் இல்லறத்தில் கோவலனை ஏற்றவள்
வாழ்க்கையின் சூழ்நிலையால்
பாண்டிநாட்டில்  சென்றவளோ
கோவலனைத் தானிழந்தாள் கள்வன் பழிசுமந்தே!
கோவலனைக் கள்வனல்ல என்றே நிரூபித்தாள்!
மாமதுரை தன்னை எரித்தாள்! முடிந்ததும்
சேரநாடு சென்று மலையேறி கோவலன்
தேரேறி சென்றாள் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home