Friday, September 25, 2020

முத்தொள்ளாயிரம் 65

 முத்தொள்ளாயிரம்.65


"போரகத்துப் பாயுமா பாயாது ஒருபடியா

ஊரகத்து மெல்ல நடவாயோ—கூர்வேல் 

மதவெங் களியானை மாறன்தன் மார்பம்

கதவம்கொண்டு யாமும் தொழ".

---------------------------------------------------------


போர்க்களத்தில்  பாய்வதுபோல்  செல்லப் புரவியே!

பாய்ந்துசென்றால் மாறனைநான் பார்க்க முடியாதே!

ஊர்வலத்தில் செல்வதுபோல் ஊர்ந்தால் கதவோரம்

ஆரணங்குநான் நின்றே ரசித்திருப்பேன் மற்றவர்போல்!

ஈரமனங் கொண்டே அருள்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home