Friday, September 18, 2020

முடக்கத்தால் முதுமை

 இலையுதிர் கால முதுமை முடக்கத்தில் இன்று!


வீட்டில் முடங்கிய வாழ்க்கைப் பழக்கத்தால்

காட்சிப் பொருளாய் முதியோர்கள் ஆகிவிட்டோம்!

வீட்டில் பணிஓய்வு! தூவலே இல்லாமல்

மாற்றிய கைபேசி மீது விரல்நடனம்

கூட்டி எழுதுகின்ற போக்காலே தாள்மீது

ஏட்டில் எழுத்துகள் கோணலாய்ப் போகுது!

நாட்டில் தெருவில் நடக்க முயன்றாலோ

நாட்டியம்போல் கால்கள் நடக்க மறுக்கிறது?

மாடிப் படியேறி நாளும் இறங்கினால்

ஏறினால் மூச்சுவாங்கும் கோலத்தில் வாழ்கிறோம்!

மாறிவிட்ட கோலத்தில் வாழ்வு.


(தூவல்-- பேனா)


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home