Wednesday, September 30, 2020

சங்கச்சுரங்கம் பாலாவை வாழ்த்து

 பாலாவின் சங்கச் சுரங்கம்!


இணையப்பத்து-- இரண்டாம்பத்து!


எட்டாம் உரை!


03.10.20


தலைப்பு: தமிழ்கெழு கூடல்!


நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும் திரைய முத்தமும்

இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!

( புறம்-- 58)


திருமாவளவன் -- பெருவழுதி


சோழனும் பாண்டியனும் சேர்ந்திருந்த காட்சியைப்

பார்த்தே மகிழ்ந்தார் புலவர்!  இதுபோல

சேர்ந்திருக்க வாழ்த்தி, புலியுடன் மீன்சின்னம்

பாறையில் எங்கும் பொறிக்கவேண்டும்

என்றுரைத்தார்!

போரைத் தவிர்க்கின்ற  ஒற்றுமை வேண்டுமென

வேந்தரைப்  போற்றினார் பார்த்து.


சங்கம் நிறுவித் தமிழாய்ந்த மாமதுரை

பொன்னகரைச் சேர்ந்த அரசனே! செங்கோலின்

தன்மை நழுவாமல் ஆளும் பெருமையைக்

கொண்ட மதுரைக் கரசனே என்றேதான்

தன்வாழ்த்தைக் கூறுகிறார் சாற்று.


இந்தந் தலைப்பைத் தலைப்பாக்கிப் 

பேசுகின்றார்

சங்கச் சுரங்கத்தில்  பாலா சனிக்கிழமை!

சங்கச் சுரங்க அரங்கத்தில் ஆர்வமுடன்

பங்கெடுக்கும் பாலாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home