Tuesday, September 15, 2020

கவிமாமணி தென்னவனுக்கு நினைவேந்தல்

 கவிமாமணி தென்னவன் காலமானார்!


16.09.20


மூச்சுக்கு முந்நூறு பாட்டெழுதும் தென்னவன்!

ஊற்றிலே நீர்வற்றும் தென்னவன் பாவூற்றில்

ஊற்றெடுக்கும் பாவினங்கள் வற்றாது வற்றாது!

தேற்ற முடியவில்லை தேம்பி அழுகின்றோம்!

காற்றெல்லாம் தென்னவன் பாக்களைப் பாடுதம்மா!

பாத்தமிழில் மேடையில்  பேசி மகிழ்ந்தவர்!

ஏக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றுவிட்டார்

என்றுகாண்போம்?

பாவணக்கம் கூறு நினைந்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home