Sunday, September 20, 2020

பாலாவின் சங்கச்சுரங்கம்

 பாலாவின் சங்கச் சுரங்க நிகழ்ச்சிக்கு வாழ்த்து!


இணையப்பத்து-- இரண்டாம் பத்து


ஆறாம் உரை!


19.09.20


தலைப்பு:

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்


நற்றிணைப் பாடலுக்கு நல்ல விளக்கத்தை

அற்புதமாய்த் தந்தார் தனது கருத்தாக

எத்தனைச் சான்றுகள் அத்தனையும் முத்துகள்!

கற்றுத் தெளிந்த கருத்து.


இலக்கணத்தைத் தொட்டேதான் வித்தகத்தைக் காட்டி

விளக்கத்தைச் சொன்னார் விவேகத்தை வாழ்த்து!

மரங்களின் பின்னணி யெல்லாம் அருமை!

இலக்கிய ஆளுமையை வாழ்த்து.


மரங்களை வெட்டவரும் நேரத்தில் அங்கே

மரங்களைச் சுற்றிநின்று பெண்கள் மறித்து

மரங்களை வெட்ட விடாத நிகழ்வு

விளக்கம் அறிந்ததை வாழ்த்து.


புன்னைமரத்தின் புகழ்


புன்னை மரத்தின் புகழ்மணக்க சான்றுகளைச்

சங்க  இலக்கியம் கூறுவதைச் சொல்லியதும்

எங்கெங்கோ சென்றோம் பாலா உரையுடன்!

வண்டமிழ்போல் வாழ்க திறம்.


குருவியின் முட்டை


புன்னை அரும்புகள் மொட்டவிழும் கோலமோ

சின்னக் குருவிமுட்டை வாய்திறக்கும் கோலம்போல்

கண்கவர புன்னைப்பூ பூத்துக் குலுங்குவதைக்

கண்முன்னே தந்தவரை வாழ்த்து.


கடிமரம்


நாட்டின் இறையாண்மை யெல்லாம் கடிமரத்தைக்

காப்பதில் உள்ளதென்றார்! யாரும் கடிமரத்தைத்

தூற்றினால் சீறுவான் மன்னன் படையெடுப்பான்!

ஏற்றுவான் வெற்றிக் கொடி.


உன்னமரம்


உன்னமரம் பூத்துக் குலுங்கினால் நாட்டுக்கு

நன்மை விளையுமென்றும் காய்ந்து சருகானால்

நன்மையின்றி  தீமை விளையுமென்ற

நம்பிய

தன்மையைக் கூறினார் இங்கு.


சங்கச் சுரங்க நிகழ்வுகள் எல்லாமே

தங்கப் புதையலாய் அன்றாட வாழ்வியலில்

அன்றுமக்கள் வாழ்த்ததைக் கூறும் எளிமையில்

ஒன்றும் திளைக்கின்றோம் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home