Friday, October 30, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள்!


யானைமலை அருமை!


இயற்கையெனும் சிற்பி வடித்த சிலைதான்!

உயரமான யானை அமர்ந்திருக்கும் கோலம்

வியக்கவைக்கும் பார்க்க! மலைக்கவைக்கும் நாளும்!

தயக்கமின்றி எத்தனை ஆண்டுகள் பார்த்தும்

சலிக்கவில்லை பார்க்க! சிறுவயதில் பார்த்தோம்!

வழியிலே போகும் பொழுதெல்லாம் பார்ப்போம்!

விழிகள் படம்பிடிக்கும் பார்த்து.


தாய்தந்தை காண்பித்தார் பார்த்தோம்! நாமிங்கே

தாய்தந்தை ஆனபின் பிள்ளைக்குக் காட்டினோம்!

சேய்களின் பிள்ளையாம் பேரனுக்கும் பேத்திக்கும்

ஓயாமல் காட்டினோம் சேர்ந்தேதான் நாம்பார்த்தோம்!

யானைமலை பார்ப்போம் ரசித்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home