Friday, October 30, 2020

மதுரை நினைவுகள்

 மதுரை நினைவுகள் 1954--58


பதநீர்! பதநீர்!


காலைப் பொழுதில் பதநர் பதநியென்றே

சாலையில் கூவிடுவார்! வீட்டில் அழைத்திடுவார்!

ஓலை எடுப்பார்! குழியாக்கி கட்டுவார்!

ஓலைக் குழிக்குள் பதநீரை ஊற்றுவார்!

ஆவலுடன் நாங்கள் சுவைத்தே பருகுவோம்!

காலையில் வெள்ளைப் பதநீர் இனித்திருக்கும்!

தோளில் நெடுங்கம்பில் பானை இருபக்கம்!

வேகமாய் ஓடியே வந்திடுவார் வீடுவீடாய்!

தாகம் தணிப்பார் சிரித்து.


மதுரை பாபாராஜ் 


0 Comments:

Post a Comment

<< Home