Saturday, December 26, 2020

39 இறைமாட்சி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!


பொருட்பால்

39 இறைமாட்சி

குறள் 381:

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசரு ளேறு.

படையுடன், குடிமக்கள், செல்வம், அமைச்சர்,

நிறைவான நட்பு, அரணென ஆறும்

உடையதே வல்லரசில் ஏறு.

குறள் 382:

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற் கியல்பு.

துணிவு, இரக்கம், அறிவுடைமை, ஊக்கம்

எனநான்கும் வேந்தன் இயல்பு.

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவற்கு.

சோம்பலின்மை, கல்வி, துணிவு இவைமூன்றும்

நாடாள்வோர் போற்றுகின்ற பண்பு.

குறள் 384:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மான முடைய தரசு.

அறநெறியைப் போற்றி, கொடுமை தவிர்த்து,

மறத்தில் தவறாமல் மானத்தைக் காக்கும்

நிறைவினைக் கொண்ட தரசு.

குறள் 385:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

பொருளீட்டிக்  காத்தும், வகுத்தும் முறையாய்ச்

செலவழிக்க வல்ல தரசு.

குறள் 386:

காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

தோற்றம் எளிமை! கடுஞ்சொல்லே பேசமாட்டான்!

போற்றுவார் நல்லாட்சி என்று.

குறள் 387:

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.

இன்சொல்லே பேசுவார்! ஏழைக்குத் தந்திடுவார்!

பண்புடையோர் மாட்டே உலகு.

குறள் 388:

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

நெறிமுறை போற்றியே மக்களைக் காப்போன்

சிறந்த அரசனாவான் செப்பு.

குறள் 389:

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

பெரியோர் அறிவுரை கேட்டு நடக்கும்

அரசின்

நிழலில் தழைக்கும் உலகு.

குறள் 390:

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.

வறியவர்க்கு ஈதல், கருணை,நடுநிலை,

மக்கள்

குடிகாத்தல் வேந்தர்க் கழகு



































0 Comments:

Post a Comment

<< Home