Saturday, December 26, 2020

40 கல்வி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


40 கல்வி

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

கற்பதை  ஐயமின்றிக் கற்கவேண்டும்! 

கற்றபின் 

கற்றதை வாழ்க்கையில் போற்று.

குறள் 392:

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணும் எழுத்தும் படிப்பறிவின் கண்களாம்!

மண்ணுலக வாழ்வின் உயிர்.

குறள் 394:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

மனம்மகிழ  பேசி, பிரிவில் கலங்கி

மனம்வாடல் சான்றோரின் பண்பு.

குறள் 395:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.

செல்வந்தர் முன்னே வறியவர்போல் கற்றவர்முன்

கல்லாதார் கற்கவேண்டும்! கற்கச் சுணங்கினால்

கல்லார் கடையர்தான் காண்.

குறள் 396:

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

தொட்டேதான் தோண்டும் அளவுக்கு நீரூறும்!

கற்கும் அளவே அறிவு.

குறள் 397:

யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.

பாரெல்லாம் வாழ்ந்திடலாம் என்றறிந்தும், சாகுமட்டும்

ஆர்வமின்றி கற்பதில்லை! ஏன்?

குறள் 398:

ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து.

ஒருபிறப்பில் கற்றால் தலைமுறை ஏழும்

அருமையாய் வாழும் நிமிர்ந்து.

குறள் 399:

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

தாம்கற்ற கல்வி உலகை  மகிழ்விக்கும்

பாங்கறிந்து கற்பார் தொடர்ந்து.

குறள் 400:

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

ஈடில்லா செல்வமே கல்வி! இதற்கிணை

வேறுசெல்வம் எங்குமில்லை சொல்.


































0 Comments:

Post a Comment

<< Home