Tuesday, December 29, 2020

47 தெரிந்து செயல்வகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

47 தெரிந்து செயல்வகை

குறள் 461:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.


செயல்படும் முன்னால் விளைவைக் கணித்துச்

செயலில் இறங்கவேண்டும் சாற்று. 

குறள் 462:

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில்.


தெரிவுசெய்த மாந்தருடன் சிந்தித்துச் செய்தால்

எளிதாய் முடியும் செயல்.

குறள் 463:

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

ஊக்கா ரறிவுடை யார்.


என்றோ வருமென்றே இன்றிருக்கும் கையிருப்பை

இங்கே இழக்கமாட்டார் நல்ல அறிவுடையார்!

என்றுமே ஆசை அழிவு.

குறள் 464:

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பா டஞ்சு பவர்.


இழிவு  வருமென் றஞ்சுவோர் அந்தச்

செயல்களை மேற்கொள்ளார் சாற்று.

குறள் 465:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.


முறையாகச் செய்யாத எச்செயலும் இங்கே

பகைவர்கள் காலூன்ற வாய்ப்பு.

குறள் 466:

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.


செய்வதற் கஞ்சுவதைச்   செய்தாலும் செய்வதைச்

செய்யாமல் விட்டாலும் கேடு.

குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு.


எண்ணிச் செயல்பட்டால் உயர்வு! தொடங்கியபின்

எண்ணுதல் ஏற்படுத்தும் தாழ்வு.

குறள் 468:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.


படைபோல் துணையிருந்த போதும் செயலை

முறையின்றிச் செய்தால் இழப்பு.

குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.


நல்லதைக் கூட இயல்பறிந்து செய்யவேண்டும்!

இல்லையென்றால் நல்லதாலும் கேடு.

குறள் 470:


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு

கொள்ளாத கொள்ளா துலகு.


உயர்ந்தோர் பழிக்கும் செயல்களைச் செய்தால்

உலகம் ஏற்காது சாற்று.


மதுரை பாபாராஜ்




































0 Comments:

Post a Comment

<< Home