Monday, December 28, 2020

44. குற்றங்கடிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

44. குற்றங்கடிதல்

குறள் 431:


செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.


இறுமாப்பு கோபம் இழிசெயல் அற்றோர்

பெறுகின்ற செல்வம் உயர்வு.

குறள் 432:

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.


பேராசை  தேவையற்ற தன்மானம் வக்கிரம்

கேடாம் தலைமைக் குணர்.

குறள் 433:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.


தினையளவு குற்றம் புரிந்தாலும் சான்றோர்

பனையளவாய்ப் பார்ப்பார் இடிந்து.

குறள் 434:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை.


குற்றம் பகையமையக் காரணம்! என்றென்றும்

குற்றம் தவிர்த்தலே பண்பு.

குறள் 435:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.


வருமுன்னர் காக்கத் தவறுகின்ற வாழ்க்கை

நெருப்பின்முன் வைக்கோல்போர் போல்.

குறள் 436:

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.


தன்குற்றம் நீக்கிப் பிறர்க்குற்றம் நீக்குகின்ற

பண்பிற்கோ ஈடில்லை கூறு.

குறள் 437:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.


பயன்படாமல் சேமிக்கும் செல்வமோ எந்தப்

பயனுமின்றிப் பாழாகும் சாற்று. 

குறள் 438:

பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று.


பற்றுடன்  சேர்த்துவைத்த செல்வத்தை 

ஈயாத

குற்றமே  குற்றமாம் கூறு.

குறள் 439:

வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.


தன்னையே தானே  வியந்துகொண்டு

தன்னலத்தால் 

நன்மைசெய் யாததோ கேடு.

குறள் 440:


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.


தானெண்ணும் திட்டத்தை மாற்றார் அறியாமல்

காப்பவரைச் சூழ்ச்சியால் வெல்வதும் கூடுமோ?

மாற்றார் வலுவிழப்பார் கூறு.


மதுரை பாபாராஜ்


































0 Comments:

Post a Comment

<< Home