Sunday, December 27, 2020

43 அறிவுடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

43 அறிவுடைமை

குறள் 421:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.


அறிவே பகைவரைத் தாக்கும் கருவி!

பகையழிக்க வொண்ணா அரண்.

குறள் 422:

சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்பா லுய்ப்ப தறிவு.


கண்டபடி வாழாமல் நல்வழியைக் காட்டுகின்ற

பண்பின் விளக்கே அறிவு.

குறள் 423:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


எப்பொருளை யார்சொன்ன போதிலும் 

மெய்ப்பொருளை

உற்றுநோக்கும் ஆற்ற லறிவு.

குறள் 424:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.


சொல்வதை மற்றவர்கள் ஏற்குமாறு சொல்வதும்

சொல்பவரின் சொற்களை ஆய்ந்து தெளிகின்ற

வல்லமையும் கொண்ட தறிவு.

குறள் 425:

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்

கூம்பலு மில்ல தறிவு.


உயர்ந்தோரை நட்பாக்கி இன்பதுன்பம் என்ற

இரண்டு் நிலையைச் சமமாகப் பார்க்கும்

தரமான பண்பே அறிவு.

குறள் 426:

எவ்வ துறைவ துலக முலகத்தோ

டவ்வ துறைவ தறிவு.


இவ்வுலகில் சான்றோர்கள் எவ்வழி வாழ்கின்றார்

அவ்வழி வாழ்தல் அறிவு.

குறள் 427:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.


அறிவுடையார் பின்விளைவைச் சிந்திப்பார்! நாளும்

அறிவிலார் சிந்திப்ப தில்.

குறள் 428:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்.


அஞ்சுவதற்கு அஞ்சாமல் வாழ்தல் அறியாமை!

அஞ்சுதல் சான்றோர்  செயல்.

குறள் 429:

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.


வருமுன்னே காக்கும் அறிவிருந்தால் துன்பம்

துரும்பாகும்  சந்திப்பார் சாற்று.

குறள் 430:

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்.


அறிவிருந்தால் எல்லாம் இருப்பவராம்! மாந்தர்க்( கு)

அறிவில்லை என்றாலோ என்ன இருந்தும்

எதுவுமற்றோர் ஆவார் உணர்.






























0 Comments:

Post a Comment

<< Home