Monday, December 28, 2020

அம்மாவின் அடுக்களை

 அமர்க்களம்!


அடுப்பைக் களிமண்ணால் பூசி அழகாய்

எடுப்பாகக்  கட்டி விறகைச் செருகி

பெரிதாக ஒன்றும் சிறிதாக ஒன்றும்

உலைப்பானை மற்றும் சிறுபானை வைக்க

முறையாக காலையில் கோலமிட்ட பின்பே

விறகில் நெருப்பினைப் பற்றவைப்பார் வீட்டில்!

பதறாமல் வெந்நீர் முதலாக வைப்பார்!

மடமட வென்றே பணிகளைச் செய்வார்!

அமர்ந்துகொண்டே நாளும் ருசியாய்ச் சமையல்!

அமர்க்களந்தான் அம்மா திறன்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home