Tuesday, December 29, 2020

46 சிற்றினம் சேராமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

46 சிற்றினம் சேராமை

குறள் 451:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சிற்றினத்தைச் சேர பெரியோர்கள் அஞ்சுவார்!

சுற்றமென்பார் கீழ்மக்கள்  சூழ்ந்து.

குறள் 452:

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு.


நிலத்தியல்பால் தண்ணீர்தான் மாறும்! இனத்தின்

இயல்பினை ஏற்கும் அறிவு.

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னா னெனப்படுஞ் சொல்.


மனத்தால் இயற்கை அறிவும் இனத்தால்

அனைவராலும் இப்படிப் பட்டவன் என்றே

குணத்தால் புகழுரும் உண்டு.

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்

கினத்துள தாகும் அறிவு.


மனஇயல்பே மாந்தர் அறிவெனினும் வாழ்வில்

இனஇயல்பே உண்மை அறிவு.

குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.


மனமும் செயலுமிங்கே தூய்மையாய்

ஆக

இனத்தூய்மை ஒன்றே தளம்.

குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்

கில்லைநன் றாகா வினை.


மனத்தூய்மை யாலே புகழ்வரும்! சார்ந்த

இனத்தூய்மை நற்செயலின் தூது.

குறள் 457:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழுந் தரும்.


மனநலம் செல்வம் கொடுக்கும்! புகழை

இனநலம்  நாளும் தரும்.

குறள் 458:

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்

கினநலம் ஏமாப் புடைத்து.


மனநலம் கொண்டவராய்  வாழ்ந்தாலும் சேர்ந்த

இனம்சார்ந்தே பாதுகாப்பாம் சாற்று.

குறள் 459:

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தி னேமாப் புடைத்து.


மனநலம் நேர்மறை இன்பம் தரும்!

இனநலத்தால் நிற்கும் நிலைத்து.


குறள் 460:


நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉ மில்.


நல்லினம்போல் நற்றுணை வேறில்லை!

தொல்லையினம் போலில்லை கேடு.


மதுரை பாபாராஜ்


































0 Comments:

Post a Comment

<< Home