Wednesday, December 30, 2020

48 வலியறிதல்

 குறளுக்குக் குறள்வடிவில் கருத்து

48 வலியறிதல்

குறள் 471:

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியுந் தூக்கிச் செயல்.


செயல்வலிமை தன்வலிமை மாற்றான்

வலிமை

துணைவலிமை ஆய்ந்துசெயல் செய்.

குறள் 472:

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்.


செயல்களைச் செய்ய மனமொன்றி  விட்டால்

செயலை முடிக்கலாம் கூறு.

குறள் 473:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.


வலிமை தெரியாமல் எப்படியோ செய்து 

நலிவடைந்தோர் ஏராள முண்டு.

குறள் 474:


அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.


தன்னை வியந்துகொண்டு மற்றவரைக் கேட்காமல்

என்றும் செயல்பட்டால் கேடு.

குறள் 475:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.


வண்ண மயிலிறகைக் கூட அளவின்றி 

வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காது!

வண்டியச்சு வீழுமே தூர்ந்து.

குறள் 476:

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.


மரநுனிக்குச் சென்று கிளைமுறிந்து  வீழ்தல்,

அளவுக் கதிகமாய் தன்வலிமை எண்ணிச்

செயலிலே தோற்றல்! ஒன்று.

குறள் 477:

ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.


வருவாய்க்கு ஏற்ப வழங்கவேண்டும்! மீறித்

தருதல் பொருளுக்குக் கேடு.

குறள் 478:

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

போகா றகலாக் கடை.


வரவுக்குள் நாளும் செலவென்றால் இங்கே

வரவில்லை, தீங்கில்லை சாற்று.

குறள் 479:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.


அளவறிந்து வாழவில்லை என்றாலோ

வாழ்க்கை

வளம்சரிந்து வீழும் உணர்

குறள் 480:

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும்.


அளவுக் கதிகமாய் வாரிக் கொடுத்தால்

வளமழிந்து  போய்விடும் இங்கு.


மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home