Thursday, December 31, 2020

ஓதம் சுற்றியது ஊர்

 பாலாவுக்கு வாழ்த்து!


கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!

மூன்றாம் பத்து 02.01.21

ID 81795655462

மாதர் மடநல்லார், மணலின் எழுதிய

பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;

'அகவயல் இள நெல் அரிகால் சூடு

தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்;

'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;

------------------------------------------------------------------


தலைப்பு: ஓதம் சுற்றியது ஊர்.


பரிபாடல் காட்டுகின்ற வைகையின் வெள்ளம்

புரியும் திருவிளை யாடலின் காட்சி

விரிகின்ற பாடல் வரியெடுத்தார் பாலா!

களிக்கவைக்கும் பாலாவை வாழ்த்து.


ஓதம் தமிழர் கலமோட்டும் நுட்பமாகும்!

ஓதம் கழிஓதம் மற்றும் கடல்ஓதம்

ஓதமோ இங்கே இருவகை சொல்கின்றார்

ஈடற்ற செம்பொருளைப் பார்.


கழிஓதம் என்றால் கடல்நீர் கரையை

வழிதேடி நாடும்! கடல்ஓதம் ஆழி

அலைநாடி ஓடுகின்ற நேரத்தில் நாளும்

கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வார்!

இயற்கை அறிவே மிகும்.


ஓதம் அதிகமாய் உள்ளபோது அன்பரே

ஏனோ தலைவியை விட்டுவிட்டுச் செல்கின்றாய்?

தோழி வினவும் அகப்பாட்டும் உள்ளது!

வாழிய பாலாவின் தொண்டு.


மதுரை பாபாராஜ்


கழி ஓதம்:TIDE TOWARDS SHORE-- HIGH TIDE

கடல் ஓதம்: TIDE TOWARDS THE SEA-- LOW TIDE



 .

0 Comments:

Post a Comment

<< Home