Friday, February 26, 2021

முத்தொள்ளாயிரம் 14

 முத்தொள்ளாயிரம்

பாடல் 14

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்

கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேற் கோக்கோதை நாடு. -14

-----------------------------------------------------------------

கவிதை


சேற்று நிலத்திலே ஆம்பல் மலர்கிறது!

ஈர்க்கின்ற செவ்வண்ணப் பூக்களைப்

பார்த்ததும்

தீப்பற்றிக் கொண்டதோ வெள்ளத்தில்

என்றஞ்சி

காப்பதற்குப் புள்ளினம் தங்கள் சிறகுக்குள்

மூடும் குஞ்சுகளை! இத்தகைய காட்சிகொண்ட

நாட்டுக் குரியோன் இலைவடிவ வேல்கொண்ட

மாமன்னன் கோதை! உணர்.





 

0 Comments:

Post a Comment

<< Home