Sunday, July 18, 2021

காகமும் மயில்களும்


காகமும் மயில்களும்!

மரத்தின் மேலே ஒருகாகம்
உட்கார்ந் திருந்த நேரத்தில்

மயில்கூட் டத்தைப் பார்த்ததுவே
மயிலின் தோகையை ரசித்ததுவே

அதுபோல் தோகை எனக்கிருந்தால்
அழகாய்த் தோன்றுவேன் எனநினைத்து

கீழே கிடந்த இறகுகளை
எடுத்து வாலாய்ப் பொருத்தியதே

மயில்களுக் கருகில் சென்றதுவே
வினோதத் தோற்றத்தைக் கண்டவுடன்

மயில்கள் வெறுத்து ஒதுங்கினவே!
தன்னினக் காகக் கூட்டத்தை

நாடிச் சென்றே நின்றதுவே
காகக் கூட்டம்  மிரண்டதுவே!

நாமோ நாமாக இருக்கவேண்டும்
வேடம் போட்டால் வெறுத்திடுவார்!

இதுதான் கதையின் நீதியாம்
உணர்ந்தே நடப்போம் நாமிங்கே!


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home