Thursday, July 29, 2021

விகடனில் கவிஞர் பாலாவின் தமிழ்நெடுஞ்சாலை!



விகடனில் கவிஞர் பாலாவின் தமிழ்நெடுஞ்சாலை!

பானைத்தடம்!

தேடலின் நாயகர் பாலா விகடனின்

ஏடு மணக்க தமிழ்நெடுஞ் சாலையில்

ஆர்வமுடன் தன்பயணத் தேரோட்டம் காணவைக்கும்

பார்வை அருமை அழகு.


பானை பிடித்தவள் பாக்கிய சாலியென்ற

கால மொழியில் புதுமையைச் சேர்த்தேதான்

பானையைத் தொட்டவன் பாக்கிய சாலியென்றே

பாலா உரைத்ததை வாழ்த்து.


கீழடியில் பானைத் தடங்கண்டே பூரிப்பில்

வேழமென நின்றே ரசித்துப் படமெடுக்கும்

கோலத்தில் புன்னகை பூத்தார் எழுச்சியுடன்!

ஞாலமெலாம் போற்றவாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்


முத்திரை வரிகள்:


காலத்தின் கருப்பையில் காயாத பனிக்குடம்போல்; 


இது வெறும் பானைகளின் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் ஹரப்பாவின் நலிவிற்குப் பின்னர் வட இந்தியாவில் இருவேறு பண்பாடுகள் சந்தித்த சூழல்களின் ஆகச்சிறந்த தடயம் இது.


 இலக்கியம் மட்டும்தான் பானை செய்யும் குயவரை ‘முதுவாய் குயவ’, ‘கலம் செய் கோ’, ‘வேட்கோ’ என்று போற்றுகிறது. நகர வழிபாட்டு முறையில் குயவருக்குள்ள பூசாரிப் பொறுப்பையும் சங்க இலக்கியம்தான் ஆவணப்படுத்துகிறது. 


பானையைத் தொட்டவன் பாக்கியசாலி!


எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் தமிழே!


பயணிப்பேன்...


 

0 Comments:

Post a Comment

<< Home