Sunday, August 01, 2021

சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா! 1921--2021


சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு விழா! 1921--2021

கலைஞர் திருவுருவப் படத் திறப்புவிழா வாழ்த்து!


சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு!


02.08.2021


பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு:


குறள் 118:


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணியென்றார் அய்யன்!

அமைதி பணிவு நடுவு நிலைமை

இமையானார் அப்பாவு தான்.



மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-- தலைமை


மேதகு ஆளுநர் தலைமை வகிக்கின்றார்!

நாடறிய நம்தமிழ் நாட்டின் பெருமைக்கே

ஊடகமாய் மாறியதே ஆளுநர் தலைமைதான்!

மேதகு ஆளுநரை வாழ்த்து.


மாண்புமிகு குடியரசுத் தலைவர்

ராம்நாத் கோவிந்த்


சட்டமன்றப் பேரவை நூற்றாண்டு கொண்டாட்டம்

வெற்றிமணம் வீச மலர்கிறதே

இன்றிங்கே!

இந்திய நாட்டின் மதிப்புமிகு மாண்புமிகு

பண்பாளர்  அன்புக் குடியரசு நற்றலைவர்

ராம்நாத் கோவிந்தனார் ஏற்கும் தலைமையை

நாடுபோற்ற  வாழ்த்துவோம் நாம்.


தமிழ்நாட்டின் அன்பு முதல்வராம் ஸ்டாலின்

இமைப்பொழுதும் சோராமல் நாளும் பொறுப்பைச்

சுமையென எண்ணாமல் தொண்டென்றே எண்ணி

இமையாகிக் காக்கின்றார் வாழ்த்து.


கலைஞரின் திருவுருவப் படத் திறப்புவிழா!


முத்துவேலர் அஞ்சுகம்மாள் பெற்றெடுத்த பிள்ளை!

வெற்றித் திருமகன்! முத்தமிழே மூச்சென்று

முத்திரை தன்னைப் பதித்த கலைஞரின்

அற்புத வண்ணப் படத்தை திறக்கின்றார்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரையில் கலைஞர் நூலகம்!


சங்கத் தமிழ்வளர்த்த நான்மாடக் கூடலிலே

சங்கத் தமிழன் கலைஞர் பெயரிலே

என்றும் புகழ்மணக்கும் நூலகத்தைக் கட்டுகின்றார்!

அன்பகம் மற்றும் அறிவகத்தின் நாயகன்

நம்கலைஞர் நற்புகழை வாழ்த்து.


கிண்டியில் மருத்துவமனை!


மக்கள் சிகிச்சைகள் பெற்று குணமடைய

அக்கறையாய்ப் பன்னோக்கு கொண்ட மருத்துவக்

கட்டமைப்பு கொண்ட மனையைக் கிண்டியிலே 

கட்டுகின்றார்! மக்களின் தேவை நிறைவேறும்!

மக்களின் தொண்டே மகேசனின் தொண்டென்றே

எப்போதும் எண்ணுவதை வாழ்த்து!


மேதகு தயாளம்மாள் பெருமிதம்!


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாயாய்த் தயாளம்மாள்

ஈன்றெடுத்த மைந்தனாம் ஸ்டாலினின்

சான்றாண்மைப்

பண்பறிந்தார் வாழ்த்துவோம் சூழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home