Friday, July 30, 2021

செல்விருந்தும் வருவிருந்தும்!


அதிகாரம்:விருந்தோம்பல் 

குறள் எண்:8

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு


செல்விருந்தும் வருவிருந்தும்!


உறவுகள் தங்கிப் பழகிய நாட்கள்

சிறப்பாய் இருந்தன! ஆகா அருமை!

பறவைகள் கூட்டைவிட்டுச் சென்றதுபோல் தங்கள்

கடமை அழைக்கவே கூடுநோக்கிச் சென்றார்!

அகஏக்கம் செல்விருந்து தான்


வருகின்றார் நாளை உறவினர்கள்! ஆகா!

வருவிருந்தைக் காண மகிழ்ந்திருக்கும் இன்பம்

அருவியென ஓடிவந்தே நம்மைக் குழந்தைப்

பருவத்தில் நிற்கவைக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home