Friday, August 27, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கிளியே!


அனைத்துவகைக் கோயிலுக்குள் நாள்தோறும்  போவாய்!

குழந்தை முதலாய் பெரியோர்கள் எல்லாம்

வரவேற்பார் உன்னை! மகிழ்கின்றார் கண்டு! 

மருதம், குறிஞ்சியுடன் முல்லைக்கும் சென்றே

அலையாடும் நெய்தல் மணற்குன்று பாலை

நிலமெல்லாம் உன்விருப்பம் போலப் பறந்து

அளக்கின்றாய்! இந்த விடுதலைக் காற்றில்

வலம்வந்தே வாழ்கிறாய் வாழ்க களித்து!

உலகிலே தங்குதடை எங்களுக்கே! இந்த

அளவோ உரிமையில்லை ஏன்?


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home