Tuesday, October 12, 2021

நாட்டைக் காப்பது கடமை!

 நாட்டைக் காப்பது கடமை!


போர்க்களத்தில் பார்த்தால் உயிர்க்கோ

மதிப்பில்லை!

சீரழிந்த சித்திரமாய் அங்கங்கே காண்கிறோம்!

தேரோட்டம் நின்றபின்பு தேர்களை யார்பார்ப்பார்?

வேரிழந்த பட்டமரம் மீண்டும் தழைக்காதே!

போர்க்களத்தில் நண்பர் உறவினர்

வீழ்ந்திருக்கும்

வீரர்களை விட்டுவிட்டுச் செல்கின்றார் தாண்டித்தான்!

போர்க்களத்தில் போனவர் போனவர்தான்! உள்ளவரைக்

காப்பாற்றி வாழவேண்டும்! சென்றோர்

தியாகிகளே!

நாட்டினைக் காத்தல் கடன்


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home