Sunday, November 28, 2021

குறள் 881


நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:881)


பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.


நிழலே துன்பம்:


கணவன் மனைவி ஒருவர்க் கொருவர்

நிழலாகி பக்குவமாய் வாழ்ந்தால்தான் இன்பம்!

தழலாகி வேற்றுமை கொண்டாலோ துன்பம்!

இணையர் இணக்கம் அழகு.


நீரே துன்பம்:


அளவாய்ப் பெய்தால் மழைநீரோ இன்பம்!

அளவின்றி வெள்ளமாகி நாட்டை வளைத்தால்

அளவற்ற துன்பமாய் மாறும் மழைதான்!

அளவாகப் பெய்தால் நலம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home