Monday, November 22, 2021

மாற்றியது யார்?


மாற்றியது யார்?


பூரி உருளைக் கிழங்கென்று வாழ்ந்திருந்த

காலம் மாறித்தான் பூரியும் பன்னீரும்

தோழமை கொண்டதே இன்றுதான்! இத்தகைய

மாறிவரும் மாற்றத்தை ஏற்றேதான் வாழ்கின்றோம்!

மாறிவர மாற்றியது யார்?


மதுரை பாபாராஜ்

VOV கவிஞர்  இமயவரம்பன் வாழ்த்து

பூரிக்கின்றேன்!

பூரியின் மாற்றம் கண்டு

கவிதையால் வாழ்த்த வந்த

கவிராயர் பாபா கண்டு

கற்கண்டாய் இனிக் குதென்று

செப்பித்தான் மகிழ்வேன் என்றும்!

 

0 Comments:

Post a Comment

<< Home