Friday, December 31, 2021

மோகன் வினோ விருந்தோம்பல்!


மோகன் வினோ விருந்தோம்பல்!


29.12.21/30.12.21


சென்னை-- தஞ்சாவூர்-- 


பயணம் செய்தோர்:

பாபாராஜ்-- வசந்தா-- நிக்கில்-- வருண்


இரவுச்சாப்பாடு!


இட்லி, பிரியாணி மற்றும் தயிர்உள்ளிப்

பச்சடி வைத்தனர்! உண்டோம் சுவைத்தேதான்!

எந்தக் குறையுமின்றி நாங்கள் உறங்கினோம்!

அன்பில் திளைத்தோம் மகிழ்ந்து.


வகைவகை யாக இறைச்சிப் பொருட்கள்

தொலைபேசி பேசியே மோகனோ கொண்டு

வரச்சொன்னார் நண்பரிடம்! கொண்டுவந்தார் நண்பர்!

கடலருகே சென்றேதான் வாங்கிவரச் செய்தார்!

சமைத்த வினோவுக்கு வாழ்த்து.


கீர்த்தனா மற்றும் கிருத்திக்கும் எங்களைப்

பார்த்ததும் அன்பு மழையில் நனையவைத்தார்!

ஆரவாரம் செய்தேதான் திக்குமுக் காடவைத்தார்!

நாங்கள் கிளம்பினோம் காரைக் குடிநோக்கி!

ஆகாஷ் அழுதான் பிரிவுத் துயரத்தில்!

ஏக்கமுடன் சென்றோம் பிரிந்து.


மோகன் வினோவும் கிருத்திக்கும் கீர்த்தனாவும்

ஏகமாய் எங்களை நன்கு வரவேற்றார்!

ஈடற்ற பண்பில் விருந்தோம்பல் செய்தனர்!

வேடமற்ற நல்லுறவை வாழ்த்து.


நன்றியுடன்

மதுரை பாபாராஜ்

வசந்தா






 

0 Comments:

Post a Comment

<< Home