Thursday, December 16, 2021

புரியவில்லை!!

 புரியவில்லை!


என்னசெய்வ தென்றெனக்குப் புரியவில்லை யே!

எத்திசையில் பயணமென்று தெரியவில்லை யே!

தன்னாலும் தெரியவில்லை நடித்தேதான்  வாழ்கின்றார்!

சொன்னாலும் புரியவில்லை ஏற்கத்தான் மறுக்கின்றார்!

சூழ்நிலையின் கைதியாகி தத்தளிக் கின்றேன்!

வாழ்வெனக்குப் புரியவில்லை கலங்கித் தவிக்கிறேன்!

கடைசிகட்ட வாழ்க்கையிங்கே போராட்டந் தானோ!

சிறைப்பறவை யாகிவிட்டேன் விடுதலை என்றோ?

சோதனையும் வேதனையும் சொந்த மானது!

இதயமெல்லாம் புண்பட்டே ரணங்க ளானது!!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home