Sunday, November 20, 2022

குறள்தூதர் அன்வர்பாட்சா நூல்


உலக அமைதிக்குக் குறள்காட்டும் வழி!


           நூலாசிரியர் 

தமிழ்ச்செம்மல், குறள் தூதர்

முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களுக்கு வாழ்த்து!


சிறந்த குறள்களைத் தூதுவிட்டு நூலைப்

படைத்திருக்கும் அன்வரின் ஆற்றலுக்கு வாழ்த்து!

கடைநிலை மாந்தரும் கற்றுத் தெளிய

முயன்றதில் வெற்றிபெற்றார் வாழ்த்து.


குறள்களும், கூறும் கதைகளும் நம்மை

அறவழியில் சிந்திக்கத் தூண்டும் முனைந்து!

அறநெநெறிக் கதைகள் இதயம் வருட

அலைபாயும் உள்ளம் சலனம் தவிர்த்து

முறைப்படி வாழவழி காட்டுகின்றார் அன்வர்!

மடைதிறந்த வெள்ளம்போல் செந்தமிழ்ச் சொற்கள்

படைத்திருக்கும் பாங்கினை வாழ்த்து.


தொடர்ந்து படைப்புகளை அன்வர்தான் தந்தே

தடம்பதித்துச் சாதனை நாட்டியே வாழ்க!

குறள்தூதர் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்



 

0 Comments:

Post a Comment

<< Home