அம்மா அப்பா இருவரும் பிள்ளைகளுக்குத் தேவை!
அம்மாவும் அப்பாவும் பிள்ளைகள் வாழ்க்கைக்கு
அச்சாணி யாவார்கள்! எல்லா உரிமையும்
இல்லறத்தில் கொண்டவர்கள் அம்மாவும் அப்பாவும்!
செல்லமாக கொஞ்சுவது கோபத்தில் பேசுவது
பிள்ளைகள் கொண்ட உரிமைகள்! கோபத்தை
தள்ளிவைத்து பெற்றோரைக் கட்டிப் பிடிப்பதும்
பிள்ளைகள் செய்வதுதான்! பெற்றோர்க்கும் எல்லையில்லை!
பிள்ளைக்கும் எல்லையில்லை! எல்லையற்ற அவ்வுலகம்
எல்லைக்குள் வாழ்வதே வாழ்வு.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home