Wednesday, November 15, 2023

நீரின்றி அமையாது உலகு


நீரின்றி அமையாது உலகு!


மேக வெடிப்பா திடீர்மழை கொட்டிவிடும்!

மேகமூட்டம் அங்கங்கே சாரல் மழையுண்டு!

மேகம் திரண்டுவந்தால் நல்ல மழைபெய்யும்!

மேகம் திரண்டதென்றே பார்த்தால் நகர்ந்துவிடும்!

ஆழியிலே தோன்றிப் பருவமழை பெய்துவிடும்!

ஈவிரக்கம் இல்லாமல் மாமழை பெய்வதுண்டு!

ஆயிரம் நன்மைகள் தீமைகள் உண்டெனினும்

நீரின் றமையா துலகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home