Thursday, March 07, 2024

இன்று மனைவி

 படுத்த படுக்கையாய் மனைவி!


துவண்டு சரிந்து படுத்திருக்கும் இல்லாள்!

அவளருகில் தத்தளித்துப் பார்த்திருக்கும் நான்தான்!

எனக்கொன்று வந்தால் துடித்தே கடமை

மடமட வென்றேதான் செய்தவள் இன்றோ

நடைதளர்ந்தாள் பாவம் சரிந்து.


நிழல்போல கூடவரும் என்வசந்தா இன்றோ

சருகுபோல் இங்கே படுத்திருக்கும் காட்சி

உருக்குலைய வைத்தே உலுக்குதே என்னை!

சிரிப்பாளா என்வசந்தா தான்?


எழுந்தே நடப்பாளா? பேசுவாளா மீண்டும்?

கலகலப்பாய் மாறினால் நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home