Monday, March 18, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மற்றவரைப் பற்றியே எண்ணுதல் நம்மையோ
மற்றவர்கள் என்ன நினைப்பாரோ இவ்வுலகில்
என்றெண்ணி உங்களது வாழ்வை மகிழ்ச்சியை
இங்கே இழக்கவேண்டாம்! உங்களுக்கு நீதிபதி
என்றுமே நீங்கள்தான் என்றுணர்ந்து நாள்தோறும்
உங்கள் செயல்களில் ஆர்வத்தைக் காட்டுங்கள்!
என்றும் மகிழ்ச்சியே உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home