செ.வ.இராமாநுசன்
வணக்கம்! நேற்று 14-02-2025 வெள்ளிக்கிழமை மாலையில் ஆற்றலுக்கும் போற்றுதலுக்கும் உரிய, 'வள்ளுவர் குரல் குடும்ப'ப் பண்பாளரும் 'குறள்மணம்' விருதாளருமான, மாண்புடைப் பாவலர் - மதுரை பாபாராஜ் அவர்களை, அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அகமிக மகிழ்ந்தோம்.
இயற்கைக் கனிகளை அன்புடன் வழங்கி மகிழ்ந்தேன். அளவளாவி விட்டு புறப்படும் போது, 'குறள்களுக்கு குறள் வடிவில் விளக்கம்' என்ற புதிய நூல் தனை அடியேனுக்கு வழங்கினார். இந்நூல் அண்மையில் ஐயா அவர்களால் எழுதி வெளியிடப்பெற்ற சிறந்த நூலாகும்.
தமிழ் அன்னையின் மக்களாகப் பிறந்த நாம் அனைவரும், வலிமையும் வளமும் படைத்தவர்களே! இயன்றவரை பிறமொழிக் கலப்புதனைத் தவிர்ப்போம்! இனிமைமிகு தமிழ்மொழியைச் சுவைப்போம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெற்றி நமதே! -
செ.வ.இராமாநுசன்.
மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!
தங்களின் அன்பான வரவேற்பும் அண்ணியாருடன் அமர்ந்து பேசியதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தங்கள் வீட்டு பெண்ணாக உடனிருந்து பார்த்துக் கொள்ளும் பிரியா அவர்களின் உதவிக்கு வாழ்த்துகள்!
வணக்கம் ஐயா!
செ வ இராமாநுசம்
14.02.25



0 Comments:
Post a Comment
<< Home