Sunday, September 06, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

ஆசிரியர் நாள் வாழ்த்துகள்! 05.09.26

தன்னல  மற்றதொண்டால் தங்கள்

 விலைமதிப்

பில்லாத நேரத்தை என்றும் முதலீடு 

செய்தேதான் பண்பான மாணவராய்

 மாறிட

நன்னெறிப் பாதையை இங்கேதான்

 காட்டுகின்றார்!

தன்னம்பிக் கைதன்னை நிர்மாணித்(து)

 உள்ளத்தின் 

வேட்கையைத் தட்டி எழுப்புகின்றார்

 ஆர்வமாக!

என்றென்றும் ஆசானைப் பற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home