Sunday, July 27, 2008

நோய்வந்தால் சருகாவோம்

தேக்குமர தேகத்தை நோய்களோ தாக்கிநின்றால்
காற்றில் சருகாக மாற்றிவிடும்--ஊற்றெடுத்த
ஆர்ப்பாட்டம் ஆணவம் ஆடம் பரமெல்லாம்
வேரிழந்து நிற்கும் நகைத்து.

நன்றாய் இருக்கின்ற நாள்களில் நாலுபேரைச்
சம்பாதி! அப்பொழுது தானிங்கே--நம்மைத்
துயரம் நெருக்கும் பொழுதில் துணையாய்க்
கரம்நீட்டி வந்துநிற்பார்! காண்.

0 Comments:

Post a Comment

<< Home