Thursday, December 18, 2008

வேறெங்கும் உண்டோ விளம்பு

வன்முறையால் கொந்தளித்த வங்கக் கலவரத்தைத்
தன்முறையாம் நன்முறையால் தானடக்கி -- அன்புடனே
வீறுகொண்ட காந்தியைப்போல் வெற்றிபெற்றோர் இவ்வுலகில்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

(டிசம்பர் 2005 அமுத சுரபி இதழில் வெளிவந்தது)

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger சிக்கிமுக்கி said...

அருமையான வெண்பா!

ஆழமான உயரிய கருத்து!

பாராட்டுகள்!

முதல் வரியின் கடைசியில் 'த்' சேர்த்துவிடுங்கள் (கலவரத்தைத் தன்முறையாம் - என வரும்)

8:15 AM

 

Post a Comment

<< Home