Sunday, September 06, 2009

கவிதை விளக்க நூல் வெளியீட்டு விழா

கவிதை விளக்க நூல் வெளியீட்டு விழா

First Published : 29 Aug 2009 09:06:07 AM IST


மதுரை, ஆக. 28: மதுரை திருக்குறள் அன்பர்கள் அமைப்பு சார்பில் கவிஞர் மதுரை பாபாராஜ் எழுதிய திருக்குறள் வெண்பா பாங்கில் கவிதை விளக்கம் மூன்று நூலாக அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள சி.இடி. அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
மதுரைக் கம்பன் கழகத் தலைவர் சாலமன் பாப்பையா நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நூலின் முதல் பிரதியை லெட்சுமி முத்துவீரன் பெற்றுக்கொண்டார். கவிஞர் மு.ரகுவீரகணபதி வரவேற்றார் அருள்திரு ஆ.வெ.சாந்திரகுமார சுவாமிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி தினமணி நாளேடு

2 Comments:

Blogger cheena (சீனா) said...

அன்பின் பாபாராஜ்


நல்வாழ்த்துகள்

அழைத்திருக்கலாமே - வந்திருப்பேனே - அலைபேசி எண் அழிந்து விட்டது போலும்

9:32 AM

 
Blogger தமிழ் said...

நல்வாழ்த்துகள்

11:40 PM

 

Post a Comment

<< Home