Monday, August 29, 2011

இந்தியா வல்லரசாகும்!


========================
நமது நாடு இந்தியாதான்!
நாமெல் லோரும் இந்தியர்தான்!

இமயம் முதலாய்க் குமரிவரை
அனைவரும் இங்கே சரிசமந்தான்!

மொழிகள் இனங்கள் வெவ்வேறு!
மக்கள் ஒற்றுமை கண்கூடு!

மத்திய ஆட்சி நாரென்றால்
மாநில ஆட்சிகள் மலரினங்கள்!
ஒன்றாய்த் தொடுத்த மாலைபோல்
மணத்தைப் பரப்பும் காட்சியைப்பார்!

வேற்றுமைக் குள்ளே ஒற்றுமைதான்
விவேக மான சிந்தனைதான்!

வல்லரசாகும் இந்தியா!
உழைப்போம் அதற்கு நாமெல்லாம்!

0 Comments:

Post a Comment

<< Home