Saturday, October 18, 2014

கண்ணேறும் பூசணியும்
------------------------
நாட்டிலே கண்ணேறு போகிறதோ இல்லையோ
போட்டிபோட்டுப் பூசணிக்காய் போட்டுடைத்து வீதியெல்லாம்
கீற்று வழுக்கிவிட வாகனங்கள் தத்தளிக்கும்
காட்சியைக் காண்கிறோம் நாம்.
வாய்மை வெல்லுமா?
--------------------------
செய்தி: நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம்
----------------------------
வாய்மைக்கும் நேர்மைக்கும் வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டு
நேர்மை தவறாத ஊழலற்ற ஆட்சியென்றால்
கேழ்வரகில் நெய்யொழுகும் என்றுசொல்லும் தந்திரந்தான்!
வாய்மையே வெல்லுமாம் நம்பு.
நன்றி மறவாதே
--------------------
நன்றி விசுவாசம் இல்லாத மாந்தர்கள்
என்னதான் இங்கே உயர்ந்தாலும் தாழ்ந்தவரே!
இந்தக் குணங்களைப் பின்பற்றும் மக்களை
என்றும் வணங்கும் உலகு.
நாவடக்கம் தேவை!
----------------------
கண்டபடி பேசுகின்ற நாவை அடக்காமல்
இங்கே நிதானம் இழந்துவிட்டால்---உன்னை
 மனசாட்சியே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
தினமும்  இகழும் நகைத்து.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வின் அனுபவம்
--------------------
இப்படித்தான் இங்கே நடக்கவேண்டும் என்றிருந்தால்
அப்படித்தான் எப்படியும் இங்கே நடந்துவிடும்!
இப்படியும் அப்படியும் செய்தால் தடுக்கவோ?
கற்றேன் அனுபவத்தில் நான்.

0 Comments:

Post a Comment

<< Home