Friday, December 19, 2014

ஏசுவைத் துதிப்போம்!
----------------------
கிறித்துமஸ் வாழ்த்துகள்
--------------------------
ஏசுபிரான் மக்களைக் காக்க அவதரித்தார்!
மாசற்ற தொண்டிலே ஈடுபட்டார்! நீசர்கள்
நாடதிரத் துன்புறுத்திப் பார்த்தார்! கலங்கவில்லை!
ஈடற்ற ஏசுவைப் போற்று.

மண்ணுலகம் கொண்டாடும் ஏசு பிறந்தநாளில்
அன்புடனே எல்லோரும் சேர்ந்து மகிழ்ந்திருப்போம்!
நம்வாழ்வை உய்விக்க வந்த மகானையே
என்றும் துதிப்போம் பணிந்து

0 Comments:

Post a Comment

<< Home