Sunday, January 25, 2015

திருந்தாத மக்கள்!
----------------------
கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புகின்றார்!
எங்கெங்கோ மக்கள் சிறுநீர் கழிக்கின்றார்!
கண்டபடி குப்பையைக் கொட்டிக் குவித்தே
கண்மணியே! துர்நாற்றம் வீசச் செய்வார்!
என்ன பழக்கமோ இப்பழக்கம்!  மக்களுக்குத்
தன்னொழுக்கம் இல்லையே ஏன்?

இவர்கள் வெளிநாடு சென்றால் மட்டும்
தவறாமல் அந்தநாடு சொல்லும் விதியைக்
கவனமாக பின்பற்றி வாழ்கின்றார் அம்மா!
இவர்கள் திருந்துவாரோ? சொல்

0 Comments:

Post a Comment

<< Home