Friday, January 23, 2015

வம்பை விலைக்கு வாங்காதே!
--------------------------------------+------------
கவிதைக்குக் கருத்தைக் கொடுத்த திருமதி.அமுதவல்லி அவர்களுக்கு நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சைக்கிளை ஓட்டி முடித்துவிட்டு ஸ்கூட்டரை
அக்கறையாய் ஓட்டிவிட்டு ஆசையாய்க் கார்வாங்கி
நித்தம் பயணித்தோம்!கால்களுக்கு வேலையில்லை!
முட்டிவலி தாக்க மருத்துவரை நாடினால்
தப்பாமல் இங்கே நடைப்பயிற்சி வேண்டுமென்றார்!
இப்போதோ மீண்டுமிங்கே ஓடாத சைக்கிளில்
நற்றமிழே!  ஏறி நடக்கின்றேன்! வம்புகளை
இப்படித்தான் வாங்குகிறோம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home