Saturday, September 19, 2015

அகரவரிசையில்

இல்லறத்தில் நல்லறம்!
---------------------------------------------
அன்பைப் பரிமாறி ஆசையின் வேரறுத்து
இன்சொல்லைப் பேசித்தான் ஈகைக் குணம்வளர்த்து
உண்மையைப் பின்பற்றி ஊக்கமுடன் சந்தித்தே
என்றும் எளிமையுடன் ஏற்றத்தில் துள்ளாமல்
அம்மம்மா ஐயத்தைத் தள்ளி ஒழுக்கத்தைப்
பண்பாக்கி ஓரணியாய் நாளும்  இணையர்தான்
ஒன்றிச் செயல்பட்டால் ஒளவைத் தமிழ்போல
பண்பட்டு வாழலாம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home