Sunday, September 06, 2015

திரண்டவர்கள் எங்கே?
---------------------------------------
பட்டம் பதவியில் இங்கே பரபரப்பாய்
சுற்றிவந்த காலத்தில் வண்டுகளாய் மொய்த்திருந்தார்!
வெற்றிவிழா நாயகர் ஓய்விலே வந்தபின்பு
சுற்றிவந்தோர் சென்றார் பறந்து.

பார்ப்பதற்கே ஆளின்றி வீட்டில் முதுமையிலே
வாழ்கின்ற சூழ்நிலை! நோய்களின் தாக்கத்தால்
தூர்ந்து, படுத்த படுக்கையில் வாடுகின்றார்!
யார்செய்த குற்றம் இது?

0 Comments:

Post a Comment

<< Home