Tuesday, September 01, 2015

தங்கமலை ரகசியம்!

------------------------------------
அர்ச்சுனன் குந்திமைந்தன் கர்ணனுக்கும் கண்ணன்
இருபெரிய தங்க மலைகளைத் தந்தான்!
நலிந்தோர்கள் கேட்டவுடன் வெட்டிவெட்டித் தந்திருந்தான்
அர்ச்சுனன்தான்! ஏழையோ கர்ணனிடம் கேட்டான்!
ஒருமலையை வெட்டாமல்  அப்படியே தந்தான்!
அர்ச்சு னனேபார்! கொடைவள்ளல் என்று
புவிமக்கள் கர்ணனைச் சொல்வதேன் என்று
புரிந்துகொள்! என்றுரைத்துப் புன்னகைத்தான் கண்ணன்!
புரிந்துகொண்டான் அர்ச்சுனன் தான்.

0 Comments:

Post a Comment

<< Home