Friday, August 28, 2015

சிலம்பு!
-------------
சோழநாட்டை விட்டேதான் பாண்டிய நாட்டிற்குக்
கோவலனும் கண்ணகியும் வாழ்வாங்கு வாழ்வதற்கே
ஆவலுடன் வந்தனர்! காற்சிலம்பை விற்பதற்குக்
கோவலனும் மாமதுரை வீதியிலே சென்றிருந்தான்!
ஏவலர்கள் கள்வனென்றே கோவலனைக் கொண்டுசென்றார்!
கோவலனைக் கொல்வதற்குப் பாண்டியனும் ஆணையிட்டான்!
கோவலனைக் கொன்றுவிட்ட செய்திகேட்டுக் கண்ணகியோ
பூவொன்று பூகம்பம் ஆனதுபோல் ஆர்த்தெழுந்தாள்!
காவலன் ஆண்ட அரண்மனைக்குள் சென்றிருந்தாள்!
காவலனே என்பரல்கள மாணிக்கம் என்றுரைத்தாள்!
ஏளனமாய்க் காவலனோ தேவியது முத்தென்றான்!
ஆவேச மாகத்தான் தன்சிலம்பைப் போட்டுடைத்தாள்!
மாணிக்கம் மன்னவனைத் தீண்டியதும், அய்யகோ!
பாவிநான் நீதி தவறினேன் என்றுரைத்தே
சாவைத் தழுவினான்! கண்ணகியோ மூண்டெழுந்தாள்!
சூளுரைத்தே மாமதுரை ஊருக்கே தீவைத்தாள்!
வாழவந்தாள்! வாழ்விழந்தாள்! காவியமாய் மாறிவிட்டாள்!
காலத்தின் நீதி! வணங்கு.

0 Comments:

Post a Comment

<< Home